கோவை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவின் சார்பில், மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்து, அவற்றை இடிக்க உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்துவருகின்றனர். பெரியகடை வீதியில், வின்சென்ட் சாலைப் பிரிவு அருகே தனியாருக்கு சொந்தமான பழமையானகட்டிடம் உள்ளது. இங்கு 40 கடைகள் உள்ளன. இதில் 10 கடைகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தை உபயோகிக்க தடை விதித்து மாநகராட்சி நிர்வாகத்தினர் நேற்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,‘‘இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை மிகவும் குறைந்து பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்களுக்கும், பாதசாரிகளுக்கும், பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கோவைமாநகராட்சி சட்டம் 1981 பிரிவு 327-ன் கீழ் கட்டிடத்தை உபயோகிக்க தடை விதித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
சினிமா
15 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago