மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு அளவில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிலையங்களில் கரோனா முன்னெச்சரிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ‘நிமிர்வு கலையகம்’ அமைப்புடன் பறையாட்டம் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, வரும் 7-ம் தேதி விமான நிலையம், 21-ம் தேதி மீனம்பாக்கம், டிச.6-ம் தேதி ஆலந்தூர், டிச.21-ம் தேதி சென்ட்ரல், டிச.27-ம் தேதி திருமங்கலம், ஜனவரி 1-ம் தேதி விமான நிலையம், ஜன.3-ம் தேதி திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும், வரும் 8-ம் தேதி திருமங்கலம், 22-ம் தேதி உயர் நீதிமன்றம், டிச.14-ம் தேதி கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் காலை 10 முதல் 11 மணி வரையிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும், டிச.25-ம் தேதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
33 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
7 hours ago