புதுச்சேரியில் புதிதாக 125 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று கூறியதாவது:

புதுச்சேரியில் புதிதாக 4 ஆயிரத்து 110 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 125 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி ஆனந்தா நகரை சேர்ந்த 60 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 598 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது.

1,829 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 420 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 123 (93.17 சதவீதம்) அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு 23,419- ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பாதிப்பு 13,949-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

க்ரைம்

38 mins ago

வெற்றிக் கொடி

49 mins ago

விளையாட்டு

46 mins ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்