கலை, அறிவியல் படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் 4,193 இடங்கள் ஒதுக்கீடு வரும் 20-க்குள் சேர சென்டாக் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கலை, அறிவியல் படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் 4,193 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. வரும் 20-ம் தேதிக்குள் சேர சென்டாக் அறிவுறுத்தி யுள்ளது.

புதுவை மாநிலத்தில் மொத்தம் 6 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இதில் 48 பாடப்பிரிவுகளில் 4,260 இடங்ளுக்கு சென்டாக் மூலம் சேர 10,419 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 10,040 விண்ணப்பங்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டன. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்தமாதம் 27-ம் தேதி வெளியிடப் பட்டது. பின்னர் கணினி மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த பட்டியல் சென்டாக் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட கலந்தாய்வில் 4,260 இடங்களில் 4,193 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 67 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 20-ம் தேதிக்குள் கல்லூரிகளில சேர சென்டாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்