சின்னசேலம் அருகே விளை நிலத்தில் - இளைஞர் மர்ம மரணம் உறவினர்கள் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப் பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (32). இவர் கடந்த 4-ம் தேதி முதல் மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி புவனேஸ்வரி கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரைத் தொடர்ந்து அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிந்தன் உடல் கீழ்குப்பம் ஆற்றங்கரையோரம் விளைநிலத்தில் கண்டெடுக் கப்பட்டுள்ளது. அவரது கை பகுதியில் தீக்காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே மின்சாரம் தாக்கியதால் தான் கோவிந்தன் உயிரிழந்தார் எனவும், அதனால் தான் அவரது கை பகுதியில் தீக்காயம் இருந்ததாக தகவல் பரவியது. அவரது உறவினர்கள் நேற்று விருத்தாசலம்- சேலம் சாலை மார்க்கத்தில் கீழ்குப்பம் பேருந்து நிறுத்தப் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸார், பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என மறியலில் ஈடுபட்டவர்களிடம் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் மறியலைக் கைவிட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்