வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அணை அதன் முழு கொள்ளளவான 23 அடி நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணை சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.

அணைக்கு சுமார் 2,000 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், வைப்பாறு கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் இருக்கன்குடி அணைக்குச் செல்லும். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 22.5 அடியாகும். தற்போது 17.5 அடி தண்ணீர் உள்ளது.

இந்நிலையில், வெம்பக்கோட்டை, இருக்கன்குடி அணைகளை ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேற்று பார்வை யிட்டார். பின்னர் அவர் கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மீதம் உள்ள தண்ணீரை விவசாயம், குடிநீர் தேவைகளுக்காகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்