கடலூர், புதுச்சேரியில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: வங்க கடலில் அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி ‘ஜோவத்’ புயலாகியுள்ளது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்காலில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இப்புயல் வரும் 4-ம் தேதி தெற்கு ஒடிசா கடற்கரையை நெருங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் விரைவில் கரைக்கு திரும்ப வேண்டும். 4-ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுவை மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, கடலூரிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்