தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

By செய்திப்பிரிவு

விருதுநகரில் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 1,336 பயனாளிகளுக்கு ரூ.23.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமை வகித்தார்.

எம்எல்ஏக்கள் சீனிவாசன் (விருதுநகர்), அசோகன் (சிவகாசி), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர்களுக்கு 1,336 பேருக்கு ரூ.23.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். ராணுவத்தில் பணி யாற்றியபோது உயிரிழந்த சிவகாசி எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மனைவி ரூபாவதிக்கு கருணை அடிப்படையில் விஏஓ பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார். பின்னர், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்