கால்நடைகளை கோமாரி நோய் தாக்கதொடங்கிவிட்டதால், போர்க்காலஅடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலர் செ.நல்லசாமி வெளியிட்ட அறிக்கை: கோமாரி நோய் கால்நடைகளை தாக்கும் கொடிய தொற்று நோய்.மனிதர்களைத் தாக்கும் கரோனாவைப் போன்று இதுவும் ஒரு பெருந்தொற்று. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தொற்று பரவலாகஉள்ளது. இது மாநிலம் முழுவதும் பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
மழைக் காலத்தில் இந்த நோய் எளிதாக பரவும். காற்றிலும் கூட பரவும். கால்நடை சந்தைகளை அரசு கண்காணிக்க வேண்டும். விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு சந்தைக்குக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். சந்தையிலிருந்து கால்நடைகளை வாங்கி வருவதற்கும் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இக்கொடிய நோய் தொற்றாமலும், பரவாமலும் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு முழுவீச்சில் தடுப்பூசி செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு நல்லசாமி தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago