பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, நவ.22-ம் தேதி முதல் நவ.29-ம் தேதி தமிழகத்தில் காங்கிரஸார் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் வெள்ளைப்பிள்ளையார் கோயில் அருகில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இந்த பயணத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஜேம்ஸ், செயலாளர் மணிவண்ணன், துணைத் தலைவர்கள் லட்சுமிநாராயணன், கோவி.மோகன், செயலாளரக்ள் கண்ணன், ஏசு, மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி சித்ராசாமிநாதன், பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளரும், தஞ்சாவூர் மாவட்ட மேலிட பார்வையாளருமான பெருமாள் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
நடைபயணத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இதுதொடர்பான துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago