மனைவியை கட்டையால் தாக்கிய தலைமைக் காவலர் மீது வழக்குப் பதிவு :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் அருகே புலிவலம் கவுஜியா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ்(40). திருவாரூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குடியா(35). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 11-ம் தேதி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பால்ராஜ் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த குடியா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் குடியா அளித்த புகாரின்பேரில், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தலைமைக் காவலர் பால்ராஜ் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல, குடியா, அவரது சகோதரர் பிரபாகரன் மற்றும் உறவினர்கள் 2 பேர் சேர்ந்து தன்னை தாக்கியதாக பால்ராஜ் அளித்த புகாரின்பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்