தேனி மாவட்டம், போடி மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் சிக்கி பரிதவித்த 4 பள்ளி மாணவர்களை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குரங்கணி, கொட்டகுடி, துவாக்குடி பகுதி களில் நேற்று பிற்பகலில் கன மழை பெய்தது. இதனால் மலை களில் பெருக்கெடுத்த நீரால் கொட்டக்குடி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அப்போது ஆற்றின் குறுக்கே உள்ள அணைப் பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென வெள்ளம் வந்ததால் அவர்கள் மதகுப் பகுதியில் ஏறி நின்று கொண்டனர். நீண்டநேரமாகியும் வெள்ளம் குறையாததால் கரைக்கு வரமுடியாமல் அவர்கள் தவித்தனர்.
இதைப்பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் தீய ணைப்பு நிலைய அதிகாரி சக்தி தலைமையிலான குழுவினர் போடியைச் சேர்ந்த மாணவர்கள் பாபு(14), கண்ணன்(14), கௌதம்(14), ரவி (14) ஆகியோரை பத்திரமாக மீட்டனர்.
போடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மாணவர்களை பெற் றோரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 secs ago
தமிழகம்
2 mins ago
க்ரைம்
8 mins ago
க்ரைம்
17 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago