குடகனாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு :

By செய்திப்பிரிவு

வேடசந்தூர் அருகே அழகாபுரி யில் உள்ள குடகனாறு அணை யிலிருந்து பாசனத்துக்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தண் ணீர் திறந்துவைத்தனர்.

பின்னர் அமைச்சர் ஐ.பெரிய சாமி கூறுகையில், குடகனாறு அணையிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 54 கன அடி திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 432.75 ஏக்கர், கரூர் மாவட்டத்தில் 1237.22 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

முன்னதாக, வன அலுவல கத்தில் விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி பங்கேற்று நீடித்த நிலைத்த பசுமைப் போர்வைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், வேலுச்சாமி எம்பி, காந்திராஜன் எம்எல்ஏ, வன அலுவலர் பிரபு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கோபி ஆகியோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

45 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்