தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஏஆர்ஜிஎஸ்டி.பர்னபாஸ் அருள்பொழிவு செய்து வைக்கப்பட்டார்.
தென்னிந்திய திருச் சபை திருநெல்வேலி திருமண்டலத் துக்கான பேராயர் பெயர் பட்டியல் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதில், ஏஆர்ஜிஎஸ்டி. பர்னபாஸ், ஏ.பீட்டர் தேவதாஸ், டி.பி.சுவாமிதாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பேராயர் தேர்வுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்ட த்துக்கு பிரதம பேராயர் தர்மராஜ் ரஸாலம் தலைமை வகித்தார். இதில், திருநெல்வேலி திருமண்டல பேராயராக ஏஆர்ஜிஎஸ்டி. பர்னபாஸ் ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர், திருநெல்வேலி திருமண்டலத்தின் 16-வது பேராயர் ஆவார்.
பேராயர் அருள்பொழிவு ஆராதனை பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் நேற்று நடைபெற்றது. புதிய பேராயராக பர்னபாஸ்க்கு, தென்னிந்திய திருச்சபையின் பிரதமப் பேராயர் ஏ.தர்மராஜ் ரஸாலம் அருள்பொழிவு செய்து வைத்தார். தொடர்ந்து அவர் பேராயர் ஆசனத்தில் அமர வைக்கப்பட்டார்.
புதிய பேராயரை திருநெல் வேலி திருமண்டல நிர்வாகிகள், சபை மக்கள் வாழ்த்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமண்டல இறைமக்கள் செயலாளர் ஜெயசிங், திருநெல்வேலி தொகுதி எம்பி ஞானதிரவியம், திருமண்டல பொருளாளர் மனோகர், உபதலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago