தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என தஞ்சாவூர் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் மு.ரஞ்சித் தலைமையிலும், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:
தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிலுள்ள மின்மாற்றி பழுதடைந்துவிட்டதால், கரும்பு அரைவைப் பணியை தொடங்குவது தாமதமாகும் நிலை உள்ளது. இதை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.
ராயமுண்டான்பட்டி என்.வி.கண்ணன்: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து அரசு முறையாகக் கணக்கெடுத்து, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர்: அம்மையகரம் கிராமத்தில் நடவு செய்து சில நாட்களே ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இவற்றைக் காப்பாற்ற தெளிக்க வேண்டிய ஜிங் சல்பேட்டை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.
திருவோணம் வி.கே.சின்னதுரை: திருவோணம் பகுதியில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை பயிரிடுவதற்கு விதைகள் கிடைக்கவில்லை. எனவே, விதைகள் மற்றும் யூரியா, ஜிங் சல்பேட், டிஏபி உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
முன்னதாக, 3 வேளாண் சட்டங்கள்ரத்து செய்யப்பட்டதையொட்டி, விவசா யிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர், இதற்காக உயிர்த் தியாகம் செய்த விவசாயிகளுக்காக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடி யாத நிலை ஏற்பட்டது.
அடுத்த முறை அனைத்து துறைகளிலும் உள்ள உயர் அலுவலர்கள் பங் கேற்காவிட்டால், ஆட்சியரிடம் புகார் செய்யப்படும் என கோட்டாட்சியர் எச்ச ரிக்கை விடுத்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago