ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 25 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், சென்னை ஆவின் இணை மேலாண்மை இயக்குநராகவும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக உள்ள முத்துக்குமாரசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராகவும், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திருச்சி ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
ஆதிதிராவிடர் நல இணை இயக்குநர் முஹ்ம்மது அஸ்லம், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயலாளர் மருத்துவர் மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய அங்காடி மேலாண்மை குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கமலா, திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
46 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago