3 டிஆர்ஓ-க்கள் பணியிட மாற்றம் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 25 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், சென்னை ஆவின் இணை மேலாண்மை இயக்குநராகவும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக உள்ள முத்துக்குமாரசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராகவும், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திருச்சி ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

ஆதிதிராவிடர் நல இணை இயக்குநர் முஹ்ம்மது அஸ்லம், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராகவும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயலாளர் மருத்துவர் மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய அங்காடி மேலாண்மை குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கமலா, திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

46 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்