சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்குகள் உட்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் 4 வழக்குகளில் அவருக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.
கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்கு உட்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவுக்கு ஒரு வழக்கில் நவம்பர் 16-ம் தேதி வரை காவலை நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பெண்களை மானபங்கம்செய்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட 2 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்சோ வழக்குகளில் ஏற்கெனவே 2 வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துவிட்டால் அவர் சிறையிலிருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago