அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள முத்துவாஞ்சேரியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ்(35). மளிகைக் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுபலட்சுமி(26). இருவரும் கடந்த 22-ம் தேதி அரியலூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். முத்துவாஞ்சேரி அருகே வந்தபோது, சாலையின் நடுவில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த சுபலட்சுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். மோகன்தாஸ் தஞ்சாவூர் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். விக்கிரமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
சினிமா
13 mins ago
இணைப்பிதழ்கள்
14 mins ago
தமிழகம்
19 mins ago
இணைப்பிதழ்கள்
40 mins ago
மாவட்டங்கள்
32 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago