செந்துறை அருகே - விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த குழுமூர் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் மகன் தினேஷ்(20), சுப்பராயன் மகன் ஆறுமுகம்(20). கல்லூரி மாணவர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு குழுமூரிலிருந்து அங்கனூரில் உள்ள தினேஷின் தாத்தா வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

வங்காரம் அருகே சென்றபோது, வயலிலிருந்து டிராக்டர் ஒன்று சாலையில் ஏறியுள்ளது. அப்போது, டிராக்டர் மீது தினேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், தினேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து செந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

12 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

54 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்