ராணிப்பேட்டை மாவட்ட கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறும் போது, ‘‘தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 மாதங்களுக்குள் கோ-ஆப்டெக்ஸில் ரூ.1.25 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. வரும் 4 மாதங்களில் ரூ.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸில் கிடைக்கும் பட்டு மற்ற இடங்களில் கிடைக்கும் பட்டு துணி வகைகளை காட்டிலும் தரம் அதிகம். அதில், கோ-ஆப்டெக்ஸ் பட்டில் தங்கம், வெள்ளி ஜரிகை எவ்வளவு சதவீதம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சித்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலை யங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7.67 கோடி விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு தீபாவளிக்கு விற்பனை இலக்கு ரூ.20 கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு விற்பனை நிலையத்துக்கு ரூ.40 லட்சம், அரக்கோணத்துக்கு ரூ.75 லட்சம், சோளிங்கருக்கு ரூ.4 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச் சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, கோ-ஆப்டெக்ஸ் பொது மேலாளர் (அரசு திட்டம்) பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
26 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
4 hours ago