உடுமலை வட்டாரத்தில் தரமற்ற விதைகளை நடவு செய்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது ‘‘தனியார் நிறுவனங்கள் சார்பில்பாகற்காய், பீர்க்கன், புடலை, அரசாணி, முருங்கை உள்ளிட்டகாய்கறிகளின் விதைகள் விவசாயிகளால் கொள்முதல் செய்யப்பட்டு, நடவு செய்யப்பட்டன. இந்த விதைகள், கோவை வேளாண் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது.
நடவு செய்து பல நாட்களாகியும் விளைச்சல் இல்லை. இந்த பயிர்களுக்காக உழவு, களை, உரம், பூச்சி மருந்து என பல ஆயிரம் ரூபாய் வரை செலவுசெய்தும், பலனளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்தநிறுவனத்தின் மீதும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago