விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்சுணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது:
அதிமுகவில் 2-ம் கட்டத் தலைவர்களாக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற நிஜ தலைவர்கள் தனிக் கட்சித் தொடங்கி, அதிமுகவை அசைத்துப் பார்க்க முயற்சித்து தோல்வியை தழுவினர். நிஜ தலைவர்களாலேயே முடியாததை நிழல் தலைவர்களால் என்ன செய்துவிட முடியும். தேர்தலில் வெற்றிதோல்வி என்பது சகஜம். ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை துளியும் அசைத்து பார்க்க முடியாது.
தொண்டர்கள் அவரை நம்பி ஏமாற மாட்டார்கள். சசிகலா என்ன நாடகம் நடத்தினாலும் எந்த உருவத்தில் வந்தாலும் இன்னொருமுறை அதிமுகவில் ஏமாறுவதற்கு யாரும் தயாராக இல்லை. அமமுகவை காப்பாற்ற முடியாதவர் அதிமுகவை கைப்பற்ற நினைப்பதா. எங்களுக்கு சசிகலா தேவையில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
39 mins ago
இந்தியா
3 hours ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago