தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்பின் காலியிடங்களுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
நல்லம்பள்ளி ஒன்றியம் எச்சன அள்ளி ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 83 வாக்குகள் பெற்று வி.ஜோதி தேர்வு செய்யப்பட்டார். 77 வாக்குகளுடன் மு.ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தார். அதேபோல, கடத்தூர் ஒன்றியம் சில்லார அள்ளி ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 3 வேட்பாளர்களில் ஆர்.மூர்த்தி 115 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
மாவட்ட ஊராட்சிக் குழு
அதேபோல, தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுவில் காலியாக இருந்த 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் 10-வது சுற்று முடிவில், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தா.லதா 17 ஆயிரத்து 123 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் தீ.கண்ணன் 11 ஆயிரத்து 279 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணியைக் கடந்தும் தொடர்ந்து நீடித்தது.முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago