கோவில்பட்டி: காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் சேதமடைவதை தடுக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம் விதைகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். எனவே, நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊத்துப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் ஊத்துப்பட்டி கிளை செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அழகுமுத்துபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் சேதுராமலிங்கம் ஆகியோர் பேசினர். இதில், வட்டச்செயலாளர் பாபு, நகரச் செயலாளர் சரோஜா, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
7 mins ago
ஜோதிடம்
20 mins ago
வாழ்வியல்
25 mins ago
ஜோதிடம்
51 mins ago
க்ரைம்
41 mins ago
இந்தியா
55 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago