உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் மேலூர் கிராமம் குறியமலை- தூதூர்மட்டம் செல்லும் சாலையில் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் திலகர் நகர் பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவரது மகன் விக்னேஷ் (20), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் மனோஜ் குமார்(24) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் குறியமலை- தூதூர்மட்டம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை மனோஜ்குமார் ஓட்ட, விக்னேஷ் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
அப்போது சாலையின் குறுக்கே காட்டெருமை வந்ததால், அதன்மீது மோதி இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். மனோஜ் குமார் படுகாயமடைந்தார். தகவலறிந்த கொலக்கொம்பை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விக்னேஷின் உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனோஜ் குமாரை, குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொலக்கொம்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago