போக்ஸோ வழக்கில் 2 இளைஞர்கள் கைது :

By செய்திப்பிரிவு

பரமக்குடியில் 17 வயது சிறுமியை கடத்தியது தொடர்பாக 4 இளைஞர்கள் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ஒருவர், தனது 17 வயது மகளுடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். இவரது மகளை கோயம்புத்தூரில் பணியாற்றி வந்த பெரியபட்டினம் இர்பான் அலி காதலித்து வந்துள்ளார். இதையடுத்து 17 வயது சிறுமியும், அவரது தந்தையும் கடந்த 10-ம் தேதி அதிகாலை பரமக்குடிக்கு வந்துள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இர்பான் அலி, அஸ்லாம், இஸ்மாயில், உமர் அலி ஆகிய 4 பேரும் கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை கடத்திச் சென்றனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் தலைமையிலான போலீஸார், சிறுமியை மீட்டனர். இர்பான் அலி(21), அஸ்லாம்(20) ஆகியோரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வரு கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்