திருப்பூர் கல்லூரி சாலையில் கொங்கணகிரி கோயிலுக்கு செல்லும் பாதையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கோயில், தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ளன.
கோயில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், பல்வேறுஅமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதை தொடர்ந்து, டாஸ்மாக் கடையை இன்று (அக். 8) அகற்றுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். இந்த நிலையில்,டாஸ்மாக் கடைக்கு நேற்று காலையில் மதுபானங்கள் விற்பனைக்காக இறக்கப்படுவதாக, பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும்மேற்பட்ட பெண்கள் உள்பட 50 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ க.செல்வராஜ், மக்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.திருப்பூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் வந்து கடையை அகற்றுவதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து, மதுபானக் கூடத்தில் இருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago