மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். கேபிள் டிவி ஆபரேட்டரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஆனந்த் என்பவருக்கும் கேபிள் இணைப்புகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆனந்த், துரைராஜிடம் கேபிள் இணைப்புகளை பிரித்து தர வேண்டுமென கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் சென்று, துரைராஜ் வீட்டின் முன் பெட்ரோல் குண்டை வீசிவிட்டுச் சென்றார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து துரைராஜ் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அருகேயிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஆனந்த் பெட்ரோல் குண்டு வீசியது உறுதியானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
10 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
34 mins ago
வாழ்வியல்
44 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago