தேவகோட்டை அருகே நாச்சியாபுரம், உடப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இக்கிராமங்களுக்கு பல மாதங்களாக குறைமின்னழுத்த மின்சாரம் விநியோகிக்கப் படுகிறது.
இது குறித்து பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து நேற்று மாலை திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உடப்பன்பட்டி விலக்கில் 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார், மின்வாரிய அதிகாரிகள் சமரசப்படுத் தினர். குறைமின்னழுத்தத்தை உடனடியாக சரிசெய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago