போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டி பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கார்த்திக் (23). இவருக்கும், 12-ம்வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 21-ம் தேதி அந்தமாணவியை கார்த்திக் கடத்திச்சென்றார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரணை நடத்திமாணவியை மீட்டனர். கார்த்திக்,அவருக்கு உடந்தையாக இருந்ததாக முகமதுசாலிகாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகாராஜா (23), இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த செண்பகராஜ் (27), பாரதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த 19 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். கார்த்திக் மீது போக்ஸோ சட்டத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

56 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்