நெல், மக்காச்சோளம், பருத்தி பயிருக்கு காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல் :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் துறை மூலம் திருந்திய பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பு பருவத்துக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல் 2 சம்பா மற்றும் பிர்க்கா அளவில் மக்காச்சோளம் 2, பருத்தி 2 ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். மேலும் விவசாயிகள் சிறப்பு பருவத்தில் நெல், மக்காச்சோளம், பருத்தி சாகுபடி செய்தவர்கள் பயிர் காப்பீடு செய்யலாம். நெல் சம்பா பயிர் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.32,550.20. பிரீமியத் தொகை ரூ.488.25 செலுத்த நவ.11 கடைசி தேதி ஆகும். மக்காச்சோளத்துக்கு ரூ.24,750.20-க்கு 371.25 செலுத்த கடைசி தேதி டிச.15 ஆகும். பருத்திக்கு ரூ.7,631.98-க்கு பிரீமியம் ரூ.381.59 செலுத்த கடைசி தேதி டிச.15 ஆகும். எனவே விவசாயிகள் உரிய தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

தொழில்நுட்பம்

13 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்