திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 3 மாணவிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாணவிகள், அவரவர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
இதேபோல, திருத்துறைப்பூண்டியை அடுத்த கொருக்கை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, அந்த பள்ளி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், மேலும் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருந்து நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி வளாகம் நேற்று தூய்மைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 705 பரிசோதனை முடிவுகளில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
விளையாட்டு
24 mins ago
தமிழகம்
32 mins ago
சினிமா
54 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago