கீழக்கரை அருகே பரிசு விழுந்ததாகக் கூறி ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.4.27 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பொக்கரானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு மனைவி பரமேஸ்வரி (42). இவர் ஆன்லைனில் தலைவலி தைலம் வாங்கியுள்ளார். அதனையடுத்து அவருக்கு ரூ.12 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக மொபைலில் குறுந்தகவல் வந்துள்ளது. அவர்கள் கொடுத்த போனில் பரமேஸ்வரி தொடர்பு கொண்டபோது, அந்த பரிசை பெற குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து பரமேஸ்வரி கடந்த 26.10.2020 முதல் 13.11.2020 வரை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கில் பல தவணைகளில் ரூ.4.27 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் சொன்னபடி ரூ.12 லட்சம் பரிசை வழங்கவில்லை. பரமேஸ்வரியிடம் போனில் பேசியவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனையடுத்து பரமேஸ்வரிதான் ஏமாற்றப்பட்டதை அறிந்து நேற்று முன்தினம் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
4 mins ago
தமிழகம்
13 mins ago
உலகம்
17 mins ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
2 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago