கார் மோதி வியாபாரி மரணம் :

By செய்திப்பிரிவு

உச்சிப்புளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தார்.

உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(55). இவர் உச்சிப்புளியில் பழ வியாபாரம் செய்து வந்தார். உச்சிப்புளி எம்ஜிஆர் கல்லூரி அருகே உள்ள தோப்புக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று பிற்பகலில் சென்றுவிட்டு, மதுரை-ராமேசுவரம் சாலையை கடக்க முயன்றார். அப்போது ராமேசுவரம் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நாகராஜன் படுகாயமடைந் தார். அதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நாகராஜன் உயிரிழந்தார். இது குறித்து உச்சிப்புளி போலீஸார் கோவையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் நாகேந்திரன்(42) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்