சங்க இலக்கியத்தின் பாலை பாடலுக்கு, பாலை வனம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடந்தது.
தமிழறிஞரும், 25-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மவுலானா, சங்க இலக்கியமான ஐங்குறு நூறு நூலின் பாலை பாடலுக்கு பாலை வனம் என்ற தலைப்பில் விளக்கவுரை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா, ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கம் சார்பில், குவியம் செயலி மூலம் நடந்தது.
விழாவுக்கு அஸ்ஸையித் மஸ்ஊத் மவுலானா அல்ஹாதீ தலைமை வகித்து, முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். சங்க செயலாளர் கவிஞர் கிளியனூர் இஸ்மத் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தலைவர் கலீபா, ஆலிம்புலவர் எஸ்.ஹூைஸன் முகம்மதுமன்பயீ, தமிழ் அறிஞர்கள் வா.மு.சேதுராமன், இலங்கை கலாபூஷணம் டாக்டர் ஞானசேகரன், சிங்கப்பூரைச் சேர்ந்த மா. அன்பழகன், அப்துல்காதர், சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறை தலைவர் நத்தர்ஷா, முனைவர் சேக் அப்துல்லாஹ் ஜமாலி ஆகியோர் பேசினர்.
பேராசிரியர் முரளி அரூபன், முனைவர் சஹாப்தீன் மற்றும் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் குவியம் செயலி மூலம் நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
இந்தியா
21 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago