புதுச்சேரியில் 71 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்டுள்ள தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 2,254 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் 71 பேருக்கு (3.15 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 78 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 163 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 597 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 760 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,809 ஆகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது. வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 509 (97.91 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிர் இழப்பு இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 338 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்