காளையார்கோவில் அருகே - கிராவல் மண் கடத்திய மூவர் கைது :

By செய்திப்பிரிவு

காளையார்கோவில் அருகே கிராவல் மண் கடத்திய மூவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பிரண்டைக்குளம் குரூப் நற்கனி கண்மாய் மற்றும் தனியார் பட்டா நிலத்திலிருந்து கிராவல் மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர், போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த இளையான்குடி தினேஷ், நாட்டரசன்கோட்டை ரஞ்சித்குமார், கண்டிப்பட்டி காளீஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். ஜேசிபி இயந்திரம், லாரியை பறிமுதல் செய்தனர். மொத்தம் 202 யூனிட் வரை கிராவல் மண் அள்ளி கடத்தியது தெரியவந்தது. லாரி உரிமையாளர் தேவகோட்டையைச் சேர்ந்த பாலாமணி, ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் செங்குளிப்பட்டியைச் சேர்ந்த திவ்யா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

சினிமா

31 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்