தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.
தமிழகத்தில் 2019-ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த இயந்திரங்கள் அந் தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் உள்ளன. அந்த இயந்திரங்களை கட்சியினர் முன்னிலையில் அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு இந்த இயந்திரங்களை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்பதை ஆய்வு செய்கின்றனர். சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அய்யப்பன் தலைமையிலான அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
39 mins ago
இந்தியா
41 mins ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கார்ட்டூன்
3 hours ago
இந்தியா
2 hours ago