தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ், பெரு நிறுவன பொறுப்பு திட்டத்தின்கீழ் ‘முத்தூட் சினேகசன்மானம் 2021’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு கலைகளில் மகத்தான பங்களிப்பு செய்த கலைஞர்கள் மற்றும் அவர்களின் மனைவி ஆகியோர் இந்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம். வயது மூப்பு, உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் செயல்பட முடியாத மூத்த கலைஞர்கள் இதன் மூலம் பயன்பெற முடியும்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கலைஞர்கள் இந்த நிதி உதவிக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கடிதம், ஒத்த கலை வடிவங்களில் 2 பிரபலமான கலைஞர்களிடமிருந்து பரிந்துரை கடிதம்,விருதுகள் மற்றும் பாராட்டுகள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், செய்தித்தாளில் வெளியான செய்திகள், வருவாய் சான்று ஆகியவற்றுடன் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 92880 03603, 044- 4864 1676 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களுக்கு மாதாந்திர அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும்.
இதுகுறித்து முத்தூட் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட்கூறும்போது, “ஒரு சமமான மற்றும் நிலையான சமுதாயத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கான எங்கள் நிலையான முயற்சி இதுவாகும். ஆக்கபூர்வமான கலை மற்றும் இலக்கியப் பணிகளை ஊக்கப்படுத்திய இந்த கலைஞர்களை அங்கீகரித்தல், மதித்தல் மற்றும் கவுரவித்தல் எங்கள் முக்கிய நோக்கமாகும்” என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago