எஸ்ஆர்எம் அறிவியல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் புதிய பதிவாளராக முனைவர் எஸ்.பொன்னுசாமி பொறுப்பேற்றார்.
காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இயற்பியல் துறை மற்றும் நானோ தொழில்நுட்ப துறையில் எஸ்.பொன்னுசாமி உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்.
15 ஆண்டுகளாக எஸ்ஆர்எம் தேர்வு கட்டுப்பாட்டாளராக பதவி வகித்து வந்ததுடன், (பொறுப்பு) பதிவாளராகவும் இருந்து வந்தார். ஜப்பான் நாட்டின் சிசூகோ பல்கலைக்கழக விசிட்டிங் பேராசிரியராகவும் உள்ள இவர் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட வர். படிக வளர்ச்சி, சோலார் ஷெல், தெர்மோ எலக்ட்ரிக்ஸ், நானோ மெட்ரீ யல்ஸ் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டுள்ளார்.
இவரது புதிய கண்டு பிடிப்புக்காக காப்புரிமை பெற்றுள்ளதுடன் 4 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். தேசிய, சர்வதேச அளவிலும் அறிவியல் சம்பந்தமான 200-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், மாநாடுகளில் உரை நிகழ்த்தி உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago