தங்கை கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் முன்பு டிக் டாக் புகழ் லயா நேற்று மாலை தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் நகரை சேர்ந்தவர் டிக் டாக்-ல் புகழ்பெற்ற லயா. இவரது தங்கை திவ்யா (29) ராஜேஸ்வரன் (31) என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜேஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திவ்யாவையும், குழந்தையையும் கவனிக்காமல் இருந்துள்ளார். மேலும் இருவரையும் கொடுமைப்படுத்தி வருவதாக திவ்யா, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரியில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் நடவடிக்கை இல்லாததால் நேற்று மாலை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தனது சகோதரி டிக் டாக் புகழ் லயா மற்றும் குடும்பத்துடன் தரையில் அமர்ந்து, கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், சட்டரீதியாக ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago