கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் மிதந்த ஆண், பெண் இருவரது உடல்களை குழித்துறை தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றி, களியக்காவிளை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த பெண், கொல்லங்கோடு பாத்திமாபுரத்தை சேர்ந்த கமலம்(65) என்பது தெரிய வந்தது. கணவர் இறந்த நிலையில் மகளுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
கடந்த 1-ம் தேதி வெட்டுவெந்நி பகுதிக்கு செல்வதாக கூறி விட்டுச் சென்ற கமலம், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மீட்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அடையாளம் தெரியாத வகையில்அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. அவரை அடையாளம் கண்டறிய களியக்காவிளை மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
25 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
48 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago