தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ஜெம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெம் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குழந்தைகளுக்கான இரைப்பைமற்றும் குடல் நோய் சிகிச்சை மையத்தை பேராசிரியர் பி.கிருஷ்ணராவ், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர்என்.எழிலன் ஆகியோர் திறந்துவைத்தனர். மேலும் ‘பவர்டு ஸ்பைரல் என்ட ரோஸ்கோபி’ என்ற புதிய தொழில்நுட்பமும் ஜெம் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் சில மையங்களில் மட்டும் இந்த வசதி உள்ளது.
நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு கூறும்போது, “செரிமானக் கோளாறு குழந்தையின் வளர்ச்சி, மனவளர்ச்சி, ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். உலகில் 10 சதவீத குழந்தைகளுக்கு குடல் மற்றும் இரைப்பை சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளன. எனவே, காஸ்ட்ரோஎன்டராலஜி மருத்துவம் முக்கியமானது” என்றார்.
சென்னை ஜெம் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரிடாக்டர் எஸ்.அசோகன் கூறும்போது, “குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் குடல் துறையில் அதிநவீன உள்கட்டமைப்பு, உபகரணங்கள் உள்ளன.” என்றார்.
பவர்ட் ஸ்பைரல் என்டரோஸ்கோபி நுட்பம் பற்றி ஜெம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பி.செந்தில்நாதன் கூறும்போது, “இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் முழு சிறு குடலையும் ஒரு மணி நேரத்தில் பரிசோதித்து சிகிச்சை அளிக்க முடியும்” என்றார்.
இம்மருத்துவமனையின் காஸ்ட்ரோஎன்டராலஜி துறை தலைவர்டாக்டர் வினோத் குமார் கூறும்போது, “ஸ்பைரல் என்டரோஸ்கோபி மூலம் சிறுகுடல் எண்டோஸ்கோபியை குறைந்த நேரத்தில் எளிதாக செய்ய முடியும்” என்றார்.
உலக ஹெபடைடிஸ் தினத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஜெம் மருத்துவமனையில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை பொதுமக்களுக்கு இலவச ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி, கல்லீரல் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago