ராமநாதபுரம் மாவட்டம், சின்னகீரமங்களம் கிராம துணை அஞ்சலக ஊழியர் எம்.குமார். இவர், 15 வாடிக்கையாளா்களின் சேமிப்புப் பணத்தை கணக்கில் வரவு வைக்காமலும், 5 வாடிக்கை யாளா்கள் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்தும் நிதி முறைகேடு செய்துள்ளார். இதன்படி மொத்தம் ரூ.93,200-ஐ கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து திருவா டானை தாலுகா அஞ்சலக உட்கோட்ட ஆய்வாளா் போற்றிராஜா, மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் புகார் அளித் தார். அதன் அடிப்படையில் குமார் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
3 hours ago