சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி அருகே கழிப்பறைக்காக தோண்டிய குழியில் பழமையான கருப்புநிற மண் குடுவை கண்டெடுக்கப்பட்டது.
சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னழகு. இவர் தனது வீட்டின் அருகே கழிப்பறை கட்ட குழி தோண்டினார். அப்போது 2 அடி ஆழத்தில் பழமையான கருப்பு நிற மண் குடுவை இருந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வட்டாட்சியர் திரு நாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் சசிவர்ணம் ஆகியோர் மண் குடுவையை சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் திருநாவுக்கரசு கூறுகையில், பழமையான குடுவையாக இருப்ப தால் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆய்வு செய்த பின்னர் தான் குடுவை எந்த காலத்தைச் சேர்ந்தது என்று தெரியவரும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago