மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட6 மாவட்டங்களில் - பக்ரீத் சிறப்பு தொழுகை :

By செய்திப்பிரிவு

பக்ரீத் பண்டிகையையொட்டி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.

விருதுநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும், மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள திடலிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தியும், குர்பானி கொடுத்தும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். கொடைக்கானல், பழநி, வத்தலகுண்டு உள்ளிட்ட ஊர்களிலும் சிறப்புத் தொழுகை நடந்தது. மதுரையில் அரசரடி ஈத்கா பள்ளிவாசல் மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு தொழுகைகளில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனியிலும் சிறப்புத் தொழுகை நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்