ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளுக்கு ஒரு கோடியே ஏழு லட்சம் ரூபாய் செலவில் காவிரி குடிநீர் திட்டத்தை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியத் தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். வட்டாட்சியர் முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பெறும் வசதியை தொடங்கிவைத்து அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:
சத்திரப்பட்டி மக்களுக்கு காவிரி குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வீரலப்பட்டி, சிந்தலவாடம்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளுக்கும் காவிரி குடிநீர் கொண்டு செல்லும் பணி நடைபெறுகிறது. பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும். என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
5 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
6 hours ago