விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விருதுநகரில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி மாலை அணிவித்தார்.அதைத்தொடர்ந்து எம்.பி மாணிக்கம் தாகூர் எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், ஹஸன் மவுலானா, தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கப் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் லிங்கம் உள்ளிட்டோர் மாலை அணி வித்தனர்.
மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீ.கார்த்திகேயன் தலைமையில் பந்தடி 5-வது தெருவில் காமராஜர் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் விளக்குத்தூண் அருகில் நடந்த விழாவுக்கு மதுரை நகர் மாவட்டத் தலைவர் என்.எஸ்.கே.நாகேந்திரன் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாடார் உறவின்முறை ஒருங்கிணைப் பாளர் ஜெபஸ்தியான் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
11 mins ago
விளையாட்டு
16 mins ago
சுற்றுச்சூழல்
20 mins ago
இந்தியா
31 mins ago
சினிமா
38 mins ago
இந்தியா
34 mins ago
விளையாட்டு
42 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
53 mins ago
இந்தியா
50 mins ago