தமிழக நிதி அமைச்சர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத் துவிட்டது.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக பாலகிருஷ் ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் என்னை கைது செய்தனர். உள்நோக்கத்துடன் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். என் மீது பதிவு செய்த வழக்கை திரும்ப பெற வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தமிழக நிதி அமைச்சரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை பதிவிட்டுள்ளார். இதனால் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றார். இதனைப் பதிவுசெய்த நீதிபதி, வழக்கை ரத்துசெய்ய மறுத்து, வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
22 mins ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
11 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago