கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே இஞ்சிகடவு எனும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிராம்புதோட்டம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, பள்ளத்தில் யானை ஒன்று விழுந்து இறந்து கிடந்ததை பார்த்தனர். அழகியபாண்டியபுரம் வனச்சரகர் மணிமாறன் தலைமையில் வன ஊழியர்கள் வந்து பார்வையிட்டனர். களக்காடு முண்டன்துறையில் இருந்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 8 வயது ஆண் யானை என்றும், உணவு தேடி வந்தபோது பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். அங்கேயே யானையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
5 hours ago